Monday 1 December 2014


நான் மறக்க நினைக்கும் தருணங்கள்
பார்த்து..
நீ..
பறக்க நினைக்கிறாய் என்னுள்
கிறக்கத்தைக் கொடுத்து
இறங்க மறுத்து
கிளுகிளுப்பு செய்கிறாய் கிழத்திக்கு!

நான் உன் பக்கத்தில்கூட வருவதில்லையே..
நீயேன் என் பக்கத்திலேயே..சுற்றுகின்றாய்

பஞ்சாமிர்தம் கொடுக்கின்றாய்..
பாடச்சொல்லிக் கேட்கின்றாய்.
பாலம்கட்டி வரச்சொல்கின்றாய்.
பாசவலை பின்னுகின்றாய்..

வெட்கத்தை விட்டுச் சொன்னால் நான் பெண்ணல்ல..
இதைக் கூட்டிப் பெருக்கி சமனாய் நின்று சொல்ல முடியவில்லை
இதைப் பிரித்துவிட்டு என்னைச் சொல்ல வைக்காதே
அந்தக் காதலர்கள் சொல்லும் மூன்று வாக்கியத்தை! நான் பாவம்!!

No comments:

Post a Comment