Sunday 30 November 2014

உறவு கூட்டுறவு
பாசம் அன்பின் நேசம்
இளமை
இறக்கை
ஈரம்
எண்ணம்
எதிர்காலம்
வண்ணம்
வசந்தம் இன்னு..இன்னும்..
என..
அத்தனையும் இழுத்தடைத்து
கத்தக்கத்த..குத்திக்குத்தி..
முள்வேலி போட்டது அரசமரகிளைகள்
உயிரைக்கூட..அமிலம் ஊற்றிக் கொன்றுவிட்டன
உடல்தான் இங்கே..
இந்த உடலுக்கும்கூட.எத்தனை கழுகுகள்

உண்பதை மறந்து.
உறக்கத்தை துறந்து..
பற்றுதல் வெறுத்து..
இந்த பிரபஞ்சத்தையே..எதிர்த்து..

கம்பிகளை முறுக்கி
முட்களை உடைத்து
இரும்புகளை அடித்து
கம்புகளை மடக்கி
உண்ணப் பழகிக்கொண்டிருக்கின்றேன்..

No comments:

Post a Comment