Saturday 29 November 2014

ஏவாகுட்டியிடம் கேட்டேன்
செல்லம்..
யூ லவ் மீ டாலிங்...
யெஸ்..அன்ரிகலாமா என்றாள்
எவ்வளவு எனக் கேட்டேன்..
என்கைகள் இரண்டையும் இணைக்காமல்
விரித்திக்காட்டி..
இவ்வளவா ..என்றேன்...

ஒரு செல்லச் சிரிப்புடன்..

தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும்
தன்னால் முடிந்தவரை அகலவிரித்துக்..காட்டினாள்
அதுமட்டுமல்ல...
இதற்குமேல் என்னால் முடியவில்லையே..
கையை அகட்ட என்றாளே..பார்க்கலாம்..
அள்ளியணைத்து..முத்தமாகச் சொரிந்தேன்..

இந்த உணர்வை...
எப்படி எழுதமுடியும்..
கவிதையாய்...
கட்டுரையாய்..
சிறுகதையாய்..
தொடர்கதையாய்..
இல்லையேல்.. விபரிக்கத்தான் முடியுமா...
விசுவாசமான அவளன்பையும்...
இன்னும் விபரமறியாத.. பக்தியையும்..
அதைக்காட்சியைக் காணத உங்களிடம்...!!

No comments:

Post a Comment