Wednesday 26 November 2014


முகில் கழுவிப் போகும்
வெயில் ஒற்றியெடுக்கும் ரோஜாவை
கூடுடைத்து வெளியாகும் வெண்பஞ்சில்
சில்லென...சில்லென...
வண்ணமொட்டி வாழநினைக்கும் நூல்நிலையம்

வண்ணத்துப்பூச்சிக்குள்ளே..
வல்லாட்டம் செய்யும் வழுதி

வாமம்..
வாகு..
காட்டிருக்கும் இந்த வளாகத்துக்குள்
வன்னிசகாயனுக்கே இல்லையிடம்
தென்றல் தொட்டு..
செண்பகப்பூவில் செமித்தல் நடக்கிறது
செண்ணம் கூட்டி..
செம்பத்திகாட்டி...
செந்தளிர்ப்பு ஒட்டி..
செருந்து கொடுத்துக் கோதிக் கோதி...
செல்லமாய்...செல்லமாய்...

No comments:

Post a Comment