Wednesday 26 November 2014


இது ஒரு கவிதைத்தொகுப்பு
யாரோ...
ஒரு கவிஞன் எழுதிருக்கின்றான்

கட்டிக்கட்டி வைத்திருக்கிறான்
ஊட்டிபோல்...
கொட்டிக்கொட்டிக் குவித்திருக்கிறான்
முத்துப்போல்...
விட்டு..விட்டுப் போயிருக்கிறான்
விருந்துபோல்...

பாசஊடலாய்..
பிரியத்தின் புகட்டலாய்.
.காதலின் தீட்டலும்..
செல்லமாய் திட்டலும்..
கொஞ்சமாய் அதட்டலும்..
கூதலுக்கு விரிப்புமாய்..

பக்கமெல்லாம் பழுத்துக் கிடக்கிறது
பரிவன்பு.. சொர்க்கம் பறிக்க வாவென..
பிழிந்து வைத்திருக்கிறான் தேன்வதையை..!
சுற்றி..
காற்றாடி..
கூடி...
கூத்தாடி...
பாடி..
பாவைக்க வாவென...

படித்து முடித்ததும்
பார்க்கத் தோணுகிறது
இந்த எழுத் தாளன் இளந்திரையனை!!

No comments:

Post a Comment