Friday 28 November 2014

வான்..
கடல்..
நிலமென..
முப்படைகளாலும்..
தாக்குதல் நடைபெற்றுக் கொண்டே..
நான் எப்படைக்குள் ஒளிவது...
அடிப்படையில் ..
அவனழகு ஒட்டியிருப்பதால்..
வெளிப்படையாய் காட்டுமா இரும்புப்பட்டறை
ஒட்டறையில் நான் தங்கிருந்து உடல்காவல் செய்கிறேன்
எரிபடை வீசினாலும்... எடுத்தெறிந்து பேசினாலும்..
அசங்காமல் கசங்காமல்...அணைக்கவரும் புலியை..
ஈழத்துமானும்.. அடைமானம் வைத்தே மனதை
மானம் அடையென... இழுத்தணைத்தே இடுகிறது முத்தம்

No comments:

Post a Comment