Wednesday 26 November 2014


மூச்சை தின்று,தின்று..
திணையுடன்தானிருக்கேன்..
திருப்பள்ளியெழுச்சி பாடிப் பாடி
திரும்பித் துருவி பார்த்துப் பார்த்து..
பண்பாளன் ஒருசிறங்கை நீதான் என..
அள்ளிப்போடமாட்டானா என..

என்கொம்பை ஒடித்து எழுதியவனே...
உனக்கு சரித்திரம் நான்தான்
அதற்கு கொஞ்சம் உயிர்கொடுக்க..
உலா வா...
அண்ணாந்துபார்..
நிலாவை நோக்கு
விழியாள் செண்பகப்பூ விழி யாழுடன்..
உன் உளியென்ற கண்ணும் ஒளிகொண்டு மோத..
இடியுண்டே காதல் இளகிவிழ..
மடிகண்ட கன்றாய் முட்டிநான் இழுக்க
கொடிகண்ட போதையில் சுரந்து நீகொடுக்க..
துடிக்குதே..துடிக்குதே...
எண்ணித் துள்ளித் துடிக்குதே..
கொண்டாடி மகிழ.. கொண்டாடி பூமகிழ..
ஒருநடை வந்துதான் போயேன்..திண்ணையிலே..
தென்றல்வசிக்கும் தெரு எதுவெனக்கேட்டு !!

3 comments:

  1. அன்புக்கு நன்றிங்க முனைவர் இரா.குணசீலன்

    ReplyDelete
  2. அன்புக்கு நன்றிங்க முனைவர் இரா.குணசீலன்

    ReplyDelete