Wednesday 26 November 2014

என் எண்ணம்

இது {என்} எண்ணம்

என்
வாழ்வில் இரு மெய்கள் சேர..
திரு மெய்களாக...
என் உரிமையில்
கருமை படர....

காலனுக்கும்
கணவணுக்கும்
கடும் போட்டி
கயிறிழுப்பதில்!

இடையில்...
தண்டனை எனக்கு!

என் காயத்தில்
கழுத்து வெறுமை பட...
நெற்றி களையிழக்க...
பெய்வளையின்
கைவளை தெறிக்க...
வெண்மையில் புதைந்து
ஒருமையுடன்....
என் இடையில் சுமக்கின்றேன்
எங்கள் இல்லறத்தின் சோதியை!

இளமையில்...
வெறுமையும் வறுமையும்
தனிமையும்
பாவைக்கு!

பழக்கப் பட்டவைகள்
பாரமல்ல..!!!

No comments:

Post a Comment