Friday 28 November 2014


அத்திமொட்டின் கட்டவிழ்ப்பும்..
ஆத்திசூடியின் அழகமைப்பும்..
கண்டிருக்கின்றாயா...?

ஆடைக்குள்ளே நெய்மறைவும்
அழகுக்குள்ளே உன் குறையும்..
அறிந்திருப்பாயா...?

பூவிரியும் ஓசையும்..
புல்பேசும் பாஷையும்..
உணர்ந்திருப்பாயா...?

ஊசிசொல்லும் உணர்வையும்..
பாசிகொள்ளும் காதலையும்...
கேட்டிருப்பாயா..?

இதேபோல்..
என்காதல் விரியும்போது..
உனக்கு கேட்டிருக்க வாய்பில்லை..
மெளனத்தைப் பூட்டியே..
மாரடைப்பு செய்கிறேன்...
முற்றித் துடிக்கிறேன்...
முற்றும் துறந்து தவிக்கிறேன்
கட்டிவைத்திருக்கும் மொட்டைப்போல்..

காதல் வந்தால்..சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால்..வருகிறேன்..!!

No comments:

Post a Comment