Thursday 27 November 2014


இயற்கையை உடுத்துப்பாரென்று..
அணைத்துச் சென்றான் வனத்துக்கு..
கண்ணில் கண்டெதெல்லாம்
கடைந்தெடுத்துக் கொடுத்தான்
அரங்கம் அமைத்து
அதிலே ஆரணங்கென்னை அமரவைத்து.
ஆட்சிசெய்யெனக் காட்சியமைத்து
நேசிப்பை நிமிடமில்லாமல் நிறுத்தி
பூசிப்பை புண்ணியதலமாய்யெண்ணி...
தோரணங்களை சுற்றவரைக்கட்டி
உற்சவம் பாரென ஊட்டிவிட்டு..
ஆடச்சொல்லி..
விளையாடச்சொல்லி...
அத்தனையும் ஆய்ந்து கொடுத்து
உணர்வுக்கொம்பைத் தீட்டி..
உன்னிப்பை என்னிலே பதித்து
காவல் இருக்கும் கலைமானை
கண்டு கண்ணூராதீர்கள் நீங்களும்...!!

No comments:

Post a Comment