Wednesday 26 November 2014

ரோஜாவின் ராஜா


ஆடும் மயில்களே..கூவும் குயில்களே..
இன்றுங்களை ஆரத்தழுவி
அன்னமிடப்போகிறாள் கன்னத்தில் முத்தம்
அன்பைச் சொல்லியே... அணைத்துக் கொள்கிறேன்
அகவை தேவையில்லை..அத்தனை ஆண்களுக்கும்..
தள்ளி நிற்காதீர்கள் ராஜாக்களே..
ரோஜாக் கூட்டத்துக்குள் வாருங்கள்
இன்று ..
முட்களுக்கு விடுமுறை
அள்ளி ஆனந்தமாய் வாழ்த்திவிட்டு....
சொல்லிக் கொள்கிறேன்..
நீங்களும் தோழியர்தான் எங்களுக்கென..!!

No comments:

Post a Comment