Wednesday 26 November 2014


அள்ளியணைத்து..
கட்டிப்பிடித்து..
முத்தம் கொடுத்து..
எழுதடா ஒரு கவிதை பாக்கலாம்...
எழுத்துக்குள் அடங்குமா ..இந்த அழகென..
தோற்றுப் போவாய்...
மை முடிந்துவிடும்..
பொய்வராது..
தாள் மட்டும் உன்னிடம்
தள்ளி நின்று தவிக்கும் மொழி
அப்புறம் ...
கவிதை புறப்படுமா..
கம்பி பிடி தான்..
பால்
இயல்
பலா
கா ரமென..
கூண்டுக்குள் அடைப்பேன்

No comments:

Post a Comment