Wednesday 26 November 2014

முட்டி..முட்டி..
நிரம்பி நிற்கிறதே..
அந்த மதகை கொஞ்சம் திறந்துவிடேன்
ஓடிவந்து சேரட்டும் மத்தியில்
மதாளித்து இருக்கிறது மனசு
மத்தியஸ்தம் செய்யவா..
மதிப்பளி..
மகுடம் சூட்டு..
நிறைத்துக் கொள் ஆசையை
பின் இறைத்துவிடு காதலாய்..
குனகுதல் செய்யவா
குதலையைக் கேட்க வா..
குதர்க்கம் வேண்டாம்..
குதரும் வேண்டவே..வேண்டாம்
குதுகுதுப்புடன் இருக்கின்றேன்
குந்தகமேது..?
குதித்துவா..குணஞ்ஞனே..! குணதிசைதேடி..!!

No comments:

Post a Comment