Thursday 27 November 2014

இன்று கருவிலிருந்து ..
உருவி விழுந்த நாளாமே.. தமிழரசி
எங்களின் பசிபோக்கும் ஊர்வசிக்கு
கல்வி,செல்வம்,வீரம் என...
இல்லாமலில்லை...
இருந்தும்..
குறையாமல் நிரப்பு கலைவாணியே..!
கல்கண்டு..தமிழுக்கு !

நூலில் பட்டம்விடுபவளல்ல..
பட்டம்பெற்ற தமிழரசி
பட்டாம்பூச்சி..
கொட்டத்தை அடக்கும் கொடுக்குத் தேள்
ஊக்கம் கொடுக்கும் ஊடகம்
ஊட்டியெனச் சொல்லும் பா ரகம்
காட்டியோ..கூட்டியோ ..
கொடுத்துவிட்டால் பெண்மை இழிவென..
பாய்ந்துவரும் வேங்கையிவள்
பாசக்காரப் பொம்மையிவள்
பாரதியின் கண்ணமாவும்...!

என் தோழி..
என்ன.. கொஞ்சம் சோம்பேறி.
.
எம்பாங்கி
பாம்மேறிப் படுத்திருக்கும் பல்லக்கில்
பாதம்தாங்கிருக்கும் இலக்குமி
இலவம் பஞ்சு..
இலவசமாய் கொடுக்கும் இளநகை..
இலக்கணத்தின் இழங்கிழை
இலட்டுப்போல் இனிப்பு..
இருந்தாலும்...
கர்வம்.. கனம்.. தலைமுறைக்கு..
.
இருள்போக்கும் இல்லக்கிழத்தியாள்
அருள் ஊட்டும் அன்புதாயிவள்

எங்களுக்கிக் கிடைத்த
காதலி..
தோழி..
சகோதரி
ராஸ்கல்
ராட்ஸசி
ரசிகை
ரஞ்சிதம்
இரத்தினக் கம்பளத்தில் நடந்துவா தமிழரசி!
ஆராதனை செய்யும் எங்களின் அகராதி!
அம்பாளின் ஆசிபெற்று..
ஆள்வாய் என்றென்றும் அரசாட்சி! தமிழரசியே!!

No comments:

Post a Comment