Monday 22 December 2014


பருத்திக்குள் வா என்றேன்
நெய்துவிடுவாய் என்றான்

பட்டுக்குள் வா என்றேன்
கொன்றுவிடுவாய் என்றான்

வளைக்குள் வா என்றேன்
மூடிவிடுவாய் என்றான்

வண்ணத்துக்குள் வா என்றேன்...
சொல்லி..
வாய் மூடும் முன் வந்துவிட்டான்
முற்றுப் புள்ளியை விரும்பாத..
தொடர்கதையை விரும்பிப் படிக்கும் வாசகன்.

No comments:

Post a Comment