Friday 19 December 2014


இந்த குடிசையில்தான்
வாழ ஆசைப்பட்டேன்
மாளிகை மண்ணளையக்
கூடாதென..
மதில் சுவர் எழுப்பியது
மாளிகையின்
மல்லிகை மணமாகாமல்..
குடிலின் வாயில்
பூட்டியே கிடக்கிறது
யாரும் திறக்க
முற்படாதீர்கள்
நாற்றம் வரும்..
ஏழை,எளியவனென...
“என் கண் கலங்கும்”
இருவர் உள்ளமும்
பள்ளமின்றி..
இங்குதான்
வாழ்ந்துகொண்டிர
ுக்கிறது
இன்னும்...மையலுடன்.

No comments:

Post a Comment