Sunday 21 December 2014

அன்புடைத்து குழைகொடுக்கும்
ஆருயிரை
ஏங்க..
ஏனுங்க...
இஞ்சாருங்க..
மாமா..
அத்தான்..
எப்படி..எப்படி அழைக்க...
முப்பொருள்,
முத்தமிழ்,
முப்பால்,
மும்மலம்,
முச்சந்தி,
முப்பொழுது..
அழ கன் பூ என..
முக்கூட்டு மணத்துடன்
எனைகூட்டி திரிபவனை...
தாயுமானவனுமல்ல..
அ{ன்}னைத்துமான தாயும்
இருப்பவனை..
ஓர் அகராதியாக்குங்களேன்
தேடிப் பொருளறிய...
படிக்கும்..
ஓவ்வொரு பெண்ணும்
நினைத்து வைக்கனும்
இவந்தான்என...
ஒவ்வொரு ஆணும்
சிந்தி களிக்கனும்
இது நான்தானென...
கல்வெட்டில் கண்டெடுத்த கண்
ஆளனை எப்படித்தான் அழைக்க...

No comments:

Post a Comment