Sunday 21 December 2014

எழுத்துக்களுக்குள் ஒழுகிகிடந்த
காதலை
ஒருங்கேயள்ளி
ஊறவைத்திருந்தேன்
நாயகன்..
நவரசநாயகன் வேண்டுமென
பிசிபிசுக்கும் வாசம்தேடியே..
இந்த முசுமுசுக்கை..
ஏன்..!அசையாமல் நிற்கிறாய்
அணிந்துகொள்
நானாட...
கவிநயமும்தானாட...
வா..!அழகுகாண..
கட்டிப்பிடி,
உனக்குள் இருக்கும் எனை எடுத்துக்
காட்டுகிறேன்
கலாரசிகனே....

No comments:

Post a Comment