Saturday 20 December 2014

இருள் கொடுத்தவனுக்கு
ஒளியாக..
குற்றம் செய்தவனுக்கு
துணையாக..
குருடாக்கியவனுக்கே
ஜோதிகொடுத்து..
கோயிலில் பாவை விளக்காய்
தன்
உயிரை எரித்து கரியாக்குகிறதே..
சுட்டவனையே
சுகப்படுத்துவதுதான் சுடரென
தெரிந்துகொள்!
காலனே!கடவுளே!
என்ன விமோசனம் கொடுக்கப்
போகிறாய்..
இந்த வெண்திரிக்கு!!

No comments:

Post a Comment