Monday 22 December 2014

நான் செண்டுதானே...
ஏன்..மணக்கவில்லையா...

பின் ஏன் சென்று
வாங்கி,
வந்து,
எனக்களித்தாய்...

எனக்கு வாங்கத் தெரியவில்லையென்றா..
இல்லை..
வாய்பேசத் தெரியவில்லையென்றா..

மனம்,
மானம்
மதிப்பு
மரியாதை
மகள்
நான்
உயிரென...
உன்னை நம்பி வந்ததற்காகவா...

வேறுறவாடி...
நீ
வேண்டி வந்த உன் பரிசால்..
எங்களுக்கழிவென்று
சொல்லிச் சிரிக்கிறதே
அந்த உயிர்கொல்லி நோய்

ஊமை உன் நிழலில் வாழ்ந்ததற்காகவா
நீ கொடுத்தாய் இந்த துரோகத்தை!!!

No comments:

Post a Comment