கொஞ்சம்
கூட்டி
குறைத்து
இழுத்து
ஒளித்து
போர்த்தி
அப்பட்டமாய்க்
காட்டாமல்...
அடியெடுத்து வைத்து
அன்னமாய் வந்து
நம் காலடியில்
விழுவதுதான்
அழகு கவிதை!
காண்பவர்கள் கண் பட்டு
கண்ணூறி..
சுற்றிப் போடவேண்டும்
நம்
சம்பிரதாயப்படி சரஸ்வதி என்று.
No comments:
Post a Comment