Sunday 21 December 2014

கொஞ்சம்
கூட்டி
குறைத்து
இழுத்து
ஒளித்து
போர்த்தி
அப்பட்டமாய்க்
காட்டாமல்...
அடியெடுத்து வைத்து
அன்னமாய் வந்து
நம் காலடியில்
விழுவதுதான்
அழகு கவிதை!
காண்பவர்கள் கண் பட்டு
கண்ணூறி..
சுற்றிப் போடவேண்டும்
நம்
சம்பிரதாயப்படி சரஸ்வதி என்று.

No comments:

Post a Comment