Monday 22 December 2014

வாடி விழுந்தபோதெல்லாம்...
கொஞ்சம் வசமிழந்துதான் போகிறேன்
அன்பு
கூடிப் போனதால்தான் இது குடிகொண்டதோ...

தாடியை முன்வைத்தவனே..!
இதற்கு நான் தவிடாகிப் போகிறேன்

மலடி இவ என மலைத்து நிக்காதே
நாலடி எட்டுவைத்து நகர்ந்துதான் வாயேன்

பேயடிப் புளியல்ல..
பேந்தப்பேந்த முழிக்காதே..
வாய்காலடி நீயென...
கால்பதித்து கைநனைத்து வாயலம்ப வாயேன்டா

வேய்யடா ஓலையை மோட்டுவளை நோக்கி..
பாயடா பார்த்து தர்பைக்கு நோகாமல்..
தாயடிகொடுத்த சீதனம்தான் வாயாடி
நீயாடிப் போகாதே...
கொடிக்கேத்த செடிதான்
கூடிக் காய்ப்போமா...

No comments:

Post a Comment