Sunday 8 February 2015


தாத்தா.......
ஆத்தாவும் இல்ல
அப்புவும் இல்ல
எப்பவும் நான் பறக்கிறேன்தான்
நீ வாகிக் கொடுத்ததை யாரும் தருவதாயில்லை
ஏங்கிப்போய்...

தாங்கிப் பாத்தேன்
வீங்கிப்போனதுதான் என் வீரம்
பாங்கிக்குகூட பயம் தேங்கியே...

தூங்கிகிடந்த துணிவை தூசிதட்டினேன்..
நீ கொடுத்ததை எனக்கு நானே
இருபாகங்களிலும் கட்டிகிட்டேன்
யாருக்கும் அடிமையில்லையென..
வடிவமைத்து விரிகிறேன்...

தாத்தா....
நான் உன் பேத்தியல்லவா...
மிதிப்பேனா !

மதித்துதான்...
கழட்டிக் கொடுக்கவேமாட்டேன்
நீவாங்கிக் கொடுத்த அந்த அழகுசட்டையை
கடவுள் வந்து கேட்டாலும்....

No comments:

Post a Comment