Thursday 5 February 2015


உயிருக்குள் உய்யும் மெய்யே..
தடம் பதித்துச் செல்லும் அழகும்..
ஒழுகிக் கசிந்துபோகும் அன்பும்...
மசித்த பருப்புபோல் உருவம் காணாமல்..

சகித்தே சுமக்கும் பாங்கும்..
நீ
வசித்து வாழும் கூட்டை
உசத்திப் பார்க்க வைக்கிறாய்..
உணர்வுக் கொம்பின் உதவியால்..
கையும் களவுமாய் பிடித்தேன்

நான் கழன்றால்...ஓடு
நீ மடிந்தால்..உயிர்
உயிரோடு இருக்கும்போதே...
சொல்லிவிடேன்......

No comments:

Post a Comment