Thursday 5 February 2015

கனவு


நானும்...
கண்டேன் கனவு
அதை நனவாக்கப் பாடுபட்டேன்
சமூகம் பட்டதுபாடு..
ஏற்கமுடியாதெனத் துள்ளிக்குதித்து
என்னால் அவர்களின் ஆட்டத்துக்கு
ஈடாக..
ஒத்துழைக்க முடியவில்லை
காலில்லாமல் ..
கைபிடிக்கக் கனவுகண்டால் பலிக்குமா..
நாக்குவழிக்கும் நல்லபாம்புகள் இருக்கும்வரை
கனவு நனைகிறது குடைபிடிக்க யாருமின்றி..

No comments:

Post a Comment