Wednesday 4 February 2015

ஒரு கல்லைக் கொடு
கலைவடிக்கின்றேன்
ஒரு சொல்லைக் கொடு
கவிதையாக்குவேன்
பொல்லைக் கொடு
புல்லாங்குழல் பிறந்துவரும்
வில்லைக் கொடு
விசயனைப் பார்..
ஏட்டைக் கொடு
காவியம் காண்பாய்
இமயத்தைக் காட்டு..
ஏறிவிடுகிறேன் ம்ம்ம் என்று சொல்லும் முன்பே
இதயத்தைமட்டும் பருந்துகளுக்கு இரையாக்காதே
என்னியக்கம் நின்று நீயடக்கம் செய்ய நேரிடும்

No comments:

Post a Comment