Friday 6 February 2015


ஒரு தங்கச் சுரங்கம்
மூடப்பட்டுக் கிடந்தது
சூழப்பட்ட பாறைகளால்

தேடப்பட்டு வந்த கண்ணில்..
தென்பட்டது முதல்பார்வையிலே..
துளையிட்டு துவாரமிட்டு ஊடுருவி
சொல்லடித்து செல்லத் துடித்தது

கல்மேலே செதுக்கி வைத்த பாசத்தால்
வில்லாய் வளைந்து வழிகாட்ட
மெல்லபிடித்தது உள்ளறையை

திரண்டு வந்த காதல்..
உருண்டு புரண்டு கட்டுண்டு
பிடித்து ஒளிந்து விளையாடி
வெடித்து சிதறி மறைந்தது

கொள்ளையடித்துச் செல்லும் போது...
கொன்றுபோட்டுப் போகும்போது ....
கன்றை மறந்து போனாயே...
கல்லை கலங்க வைத்தாயே...
உள்ளம் ஒன்று உனக்கில்லை
உள்ளே அன்பென்ற ஒன்றும் அங்கில்லை
கடைசிப் பார்வை பாத்தாயே...
காலம்போன கட்டைமேலே ..கள்ளா..!
கள்ளிபோல குத்தினாலும் கள்ளுப்போல தேடுதே..
இந்த சொல்லுகேளா ஊமை இதயம்
அன்பே ! என்னன்பே!! உன்னன்பை!!

No comments:

Post a Comment