Monday 9 March 2015

சின்னச் சட்டையில்..
பாவாடைசட்டையில்..
தாவணிபாவாடையில்..
சுடிதாரில்..
ப்பாண்டு ஜீன்ஸில் ..உள்ள உணர்வுவெகுளியெல்லாம்..
வழித்தெடுத்துப்
பொம்மையைச் சேலைக்குள் திணித்தடைத்து
சென்றுவா என்றால்...

பருத்தியை உடைத்துப்பார் ..
அந்த உணர்வுதான் என்நெஞ்சு
புரிந்து திரித்திருக்கிறாயா..
திரியென...
இல்லையே..
உணர்வுகளைத் தொலைத்து உணர்ச்சிக்குமட்டும் ஆளாக்கி
இரு அறையிலே..
அடைத்துவைத்திருக்கிறாயே..
ஒன்று எரிகிறது..
மற்றொன்று எரிக்கிறது !கட்டிவைத்துத் தீனீபோட்டால்...
திரியென...
நீ சொல்லும்வரை எனக்கே தெரியாது நான் சுடரென..
இப்படித்தான் எனச் சொல்லவில்லை..
இப்படியும் சில...

No comments:

Post a Comment