Monday 9 March 2015

எப்படியோ.....
தவறிவிழுந்துவிட்டேன் அந்தச் சாக்கடையில்
தூக்கி நிறுத்தவோ..
தாங்கிப்பிடிக்கவோ..
தட்டிக்கொடுக்கவோ..
கரங்கள் நீளவில்லை
“உடல்தேவையாம்”

தவறிக்கொண்டேயிருந்தேன் ..அறியாமையால்..
தவறவைத்துக்கொண்டிருந்தனர்..பெண் என்பதால்..
நான் கூனியல்ல..
நிமிரவிடவில்லை விருந்தாளிகள்..

அடித்த நீச்சல் போதுமென்று உடலசர...
மெல்லத் தலையை நீட்டி வெளிவரப்பார்த்தால்...
கரையை எங்கோ தவறவிட்டுவிட்டேன் என் இளமையின் வேகத்தால்
சரி...
ஒரு முயற்ச்சியுடன் தவழ்ந்து வருகிறேன் கண்டுவிடலாமென..
ஓ.ஓ..ஓ..ஏதோ ஒன்று என்னை அழுத்துகின்றதே..
அதுதான் புதைகுழியாம்..!
தவறிவிழுந்தாலும்.. தெரிந்துவிழுந்தாலும் விடாதாமே..
என்னை இழுத்துக்கொண்டிருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக..
இப்போ இதற்கு “உயிர்” தேவையாம்
முன்னால் உடலைக்கேட்டார்கள் இது உயிரைக்கேட்கிறது
எடுத்துவிட்டுப்போ... எயிட்ஸே..
நீயாவது தொட்டுக் கேட்டாயே..
இல்லையென்றால் ..
தேவைக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்போல..
அந்த நரகத்தில் இன்னும்நான் நெளிந்துகொண்டுதானிருப்பேன்..!!

No comments:

Post a Comment