Monday 9 March 2015

என் கணவனைப்பற்றி...அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..

பூக்கள் விரியும்போது ..ஒரு மணம்வருகின்றதல்லவா...
பெரியவர்களைக் கண்டவுடன் ..ஒரு மரியாதை தோன்றுகின்றதல்லவா..
குழந்தைகளைக் கண்டால் .அள்ளியணைத்துக் கொஞ்ச ஒரு ஆசை எழுமல்லவா...
சுவையான..அதிலும் பிடித்த உணவைக் காணும்போது ஒரு ஆவல் வருகின்றதல்லவா..
விரும்பிய..நாடெல்லாம் பார்க்கவேண்டும் என்று எண்ணும்போது.. வரமாய் வந்துவிழுகின்றதல்லவா...
கோயிலில் ..திரைவிலகி மூலஸ்தானம் தெரியும்போது.. ஓர் உணர்வு தோன்றுமல்லவா...
வறுமையில் வாடும்போது.. கோடிக்கணக்காய் ஒரு லாட்டரி விழுமல்லவா..
கண்ணிழந்தவர்க்கு.. பார்வை கிடைக்கும்போது ஆனந்தொளி தோன்றுமல்லவா...
இத்தனை உணர்வுகளையும் ஒன்றாய்க் குழைத்தெடுத்து
என்னில் பூசிப்பூசியே...
ஒவ்வொருநாளும்..
என்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்
என் மதிவாணன்தான்
என் கணவன்..!
உங்களுக்கும் இப்படிக் கிடைத்திருக்கின்றானா ஒருவன்...
இல்லவே இல்லை.. அப்படித்தானே..
ஏன் என்றால்..
என்னைப்போல் அழகியாய் நீங்கள் இருக்கமுடியாது
நான் கோயிலுக்கும் போவதில்லை
அத்தையும்,அம்மானும் என்வீட்டில் இருப்பதால்..
தொழுநோய்காரிக்கு தொண்டென . தங்களை அர்பணித்துக்கொண்டிருக்கும்
தெய்வங்களிடமிருந்து நான் அழகியாகிக்கொண்டுதான் இருக்கின்றேன் .தினம்தினம்..!!

No comments:

Post a Comment