Monday 9 March 2015

இன்றெனக்கு என்ன பரிசளிக்கப்போகிறாய்
இன்றே அளித்துவிடு..
அப்புறம்..

எனக்குக் கூச்சமாய் இருக்கலாம்..
நீயும் கூச்சத்தை மறக்கலாம்..

உனக்குநான் கண்ணுதானே..
அதனால்
இரு பரிசளி
ஒன்று “சூழ்நிலை”
இரண்டு “சமயசந்தர்ப்பம்”
இவையிரண்டையும் எடுத்து
எனக்கு அழகாகச் சுற்றிக்கொடு
பின்னால் சொல்லிக்காட்ட முடியாதல்லா..

ஒன்றுனக்குதிர்ந்தால்...
என் உயிர் மாய்ந்துபோகும்
நான்கேட்டதை எனக்களி
பின் ..
உன் கற்பைக்கூட நான் கேட்கமாட்டேன் ஏனென்று..!!

No comments:

Post a Comment