Sunday 4 January 2015


விசை நின்றது தெரியாமல்
திசைமாறிய பறவைபோல்
திகைத்து நிற்கின்றேன்
நீ என்ன திசைஅறிகருவியா...

குரும்பட்டிக் குலைபோல்
கருப்பட்டியாய் பா வடிக்க..
பார்க்காதே பார்க்காதே...என
திருகித் திருகி உண்டதிலே
என் ஜிமிக்கு முத்தை
திக்குமுக்காட வைச்ச பா கா தாச்சே..!

ஏதாவது எண்ணை பட்டால்
வெடித்துகிட்டே இருப்பேன் படபடவென
நீ என்ன எண்ணை ...?
வெடிக்காமலே தாளிக்கப்படுகிறாய்..

எதுகையாய் இருந்தால்
மோனையாய் விழுகிறாய்..
எது கை காட்டு! அந்த பாதுளை விரலுக்கு
மாதுளை வைத்து கணையாழி செய்ய..

விளம்பரம் இருந்தால்தானே விற்பனையும்..
கற்பனை சுயம்வரமும் சுரந்தடையும்
விழும் பாரம் உனக்கு தெரியவில்லையா...

கள்பனைபோல் கிடக்கும்
இந்த விளா மரத்தின்...வில்வ பழத்தின்
சுவையறியாமல்..
விட்டத்தை ஏன் இன்னும் தொட்டே நிற்கிறாய்..

எங்கே அன்புகுறியென வழிதேடி
சொல்வனத்தில் தொலைந்து போகிறேன்
குத்தி இழுக்கிறதே கொண்டை ஊசிபோல் கெண்டையை
என்னைக்கடைய எந்த கடை ய நல்லூரில் வாங்கிவந்தாய்
அந்த குத்தூசி இதயத்தை..!
என் இதயம் குடைசாய்தே கிடக்கிறது.

No comments:

Post a Comment