Thursday 1 January 2015

ஒன்று வாங்கினால்..
ஒன்று இனாமாம்..
அந்த அங்காடித் தெருவில்
அழகாய் தொங்கியது அச்செழுத்தில்..

உள்வைத்துப் போனேன் அடியை..

மல்லுவேட்டி
மடித்த சேட்டு
வாரியதலை
கூரிய பேச்சு
குனிந்த அநாகரீகம்
கூடிருக்கும் நாகரீகம்
வாட்டமில்லா வாசம்
வாட்டசாட்டமாய் மனிதம்
அன்பென்று ஒன்றைக் கொடுத்தான்
இதயமென்ற ஒன்றை கொடுக்க மறந்துவிட்டானா.....

No comments:

Post a Comment