Thursday 1 January 2015

அன்பைக் கொண்டு..
ஆக்கிரகத்தைக் கொன்றழி!
இன்னலைக் கண்டு..
ஈரப்பசை கொண்டு மெழுகிவிடு!
உகப்புக் கொண்டு..
ஊத்தைபோக்கி உலரவிடு!
எரிகதிர்போல் எழுச்சி பூண்டு..
ஏழ்மையைக் கொல்!
ஐயுணர்வை ஐக்கியமாய்க் கொண்டு
ஆக்கிப் படைத்துவிடு!
ஒட்பம் உடுத்தி..
ஓதிநட ஓர் எடுத்துக்காட்டாய்!
ஔவித்தல் கூடாதென..
ஔவையை வழிகாட்டு!
இஃதே..யாம் இணைந்தால் இன்புறலாம்..
கழிந்துபோன காலத்தைவிடுத்து..
கனிந்திருக்கும் இந்தாண்டுலே
காலடிபதித்துக் கொய்து..
காப்பாற்றிருப்போமே இவைகளை!!

{ஆக்கிரகம்-கடும்சினம்}{உகப்பு-மகிழ்ச்சி}{ஊத்தை-அழுக்கு}{எரிகதிர்-சூரியன்}{ஒட்பம்-அறிவு,அழகு}{ஔவித்தல்-பொறாமைப்படுதல்}

No comments:

Post a Comment