Monday, 22 December 2014


எத்திரை போட்டாலும்
நித்திரை இல்லையடி..

அந்த முத்திரை அன்பாலே
மாத்திரை கொடுக்கிறாய்

சுற்றி வரைகிறாயடி
சுவரெல்லாம் சித்திரமாய்..
என் மா திரையிலே..

தோத்திரம் பாடினாலும்
தோற்றுவது உன் எழில்

ஆத்திரம் வரவில்லை
அம்பிகையே..நீஎனக்கு.

முறைக்காத முள்ளடிநீ

மயக்காத கள்ளடிநீ

மறைகாத திரையடிநீ

வெற்று இலைக்கு பாக்கடிநீ

வெறுகாத இதயமடிநீ

இந்த பாறாங்கல் பாறைக்குள்
இத்தனையும் ஊறத்தான்
அத்தைமகனாய் மாறுகிறேன்..
சொத்தையெனத் தள்ளாதே..
சொத்தென ஏற்றுக்கொள்ளேன்
பத்தரைமாற்றுத் தங்கமே!
என் அழகோவியமே..!!!

No comments:

Post a Comment