மயில்இறகு பிடுங்கி
இதமாய் வருடுகிறாயே...
அதன் காயம்
உன் காயத்துக்கு மருந்தானால்...
அதன் மேனியை யார்வருடுவார்..
போய்பார்..
அது தோகைமயில்தான்
ஆணுக்கு வலியில்லையென யார் சொன்னார்....
வழியில்லாமல்....
வெளிவருவதில்லை
மூடியே பாறையாகி
முடிவில்லா முள்ளாகி
முண்டமாய்தான் பறக்கிறது
பெண் ஆட்டிக்கு தெரியாமல்...
Saturday, 24 January 2015
Sunday, 4 January 2015
விசை நின்றது தெரியாமல்
திசைமாறிய பறவைபோல்
திகைத்து நிற்கின்றேன்
நீ என்ன திசைஅறிகருவியா...
குரும்பட்டிக் குலைபோல்
கருப்பட்டியாய் பா வடிக்க..
பார்க்காதே பார்க்காதே...என
திருகித் திருகி உண்டதிலே
என் ஜிமிக்கு முத்தை
திக்குமுக்காட வைச்ச பா கா தாச்சே..!
ஏதாவது எண்ணை பட்டால்
வெடித்துகிட்டே இருப்பேன் படபடவென
நீ என்ன எண்ணை ...?
வெடிக்காமலே தாளிக்கப்படுகிறாய்..
எதுகையாய் இருந்தால்
மோனையாய் விழுகிறாய்..
எது கை காட்டு! அந்த பாதுளை விரலுக்கு
மாதுளை வைத்து கணையாழி செய்ய..
விளம்பரம் இருந்தால்தானே விற்பனையும்..
கற்பனை சுயம்வரமும் சுரந்தடையும்
விழும் பாரம் உனக்கு தெரியவில்லையா...
கள்பனைபோல் கிடக்கும்
இந்த விளா மரத்தின்...வில்வ பழத்தின்
சுவையறியாமல்..
விட்டத்தை ஏன் இன்னும் தொட்டே நிற்கிறாய்..
எங்கே அன்புகுறியென வழிதேடி
சொல்வனத்தில் தொலைந்து போகிறேன்
குத்தி இழுக்கிறதே கொண்டை ஊசிபோல் கெண்டையை
என்னைக்கடைய எந்த கடை ய நல்லூரில் வாங்கிவந்தாய்
அந்த குத்தூசி இதயத்தை..!
என் இதயம் குடைசாய்தே கிடக்கிறது.
Thursday, 1 January 2015
ஒன்று வாங்கினால்..
ஒன்று இனாமாம்..
அந்த அங்காடித் தெருவில்
அழகாய் தொங்கியது அச்செழுத்தில்..
உள்வைத்துப் போனேன் அடியை..
மல்லுவேட்டி
மடித்த சேட்டு
வாரியதலை
கூரிய பேச்சு
குனிந்த அநாகரீகம்
கூடிருக்கும் நாகரீகம்
வாட்டமில்லா வாசம்
வாட்டசாட்டமாய் மனிதம்
அன்பென்று ஒன்றைக் கொடுத்தான்
இதயமென்ற ஒன்றை கொடுக்க மறந்துவிட்டானா.....
அன்பைக் கொண்டு..
ஆக்கிரகத்தைக் கொன்றழி!
இன்னலைக் கண்டு..
ஈரப்பசை கொண்டு மெழுகிவிடு!
உகப்புக் கொண்டு..
ஊத்தைபோக்கி உலரவிடு!
எரிகதிர்போல் எழுச்சி பூண்டு..
ஏழ்மையைக் கொல்!
ஐயுணர்வை ஐக்கியமாய்க் கொண்டு
ஆக்கிப் படைத்துவிடு!
ஒட்பம் உடுத்தி..
ஓதிநட ஓர் எடுத்துக்காட்டாய்!
ஔவித்தல் கூடாதென..
ஔவையை வழிகாட்டு!
இஃதே..யாம் இணைந்தால் இன்புறலாம்..
கழிந்துபோன காலத்தைவிடுத்து..
கனிந்திருக்கும் இந்தாண்டுலே
காலடிபதித்துக் கொய்து..
காப்பாற்றிருப்போமே இவைகளை!!
{ஆக்கிரகம்-கடும்சினம்}{உகப்பு-மகிழ்ச்சி}{ஊத்தை-அழுக்கு}{எரிகதிர்-சூரியன்}{ஒட்பம்-அறிவு,அழகு}{ஔவித்தல்-பொறாமைப்படுதல்}